/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ வழுக்கி விழுந்து சேற்றில் சிக்கியதால் பெண் யானை இறந்ததா | Nilgiris | Death of female elephant
வழுக்கி விழுந்து சேற்றில் சிக்கியதால் பெண் யானை இறந்ததா | Nilgiris | Death of female elephant
நீலகிரி மாவட்டம் கூடலூர் பாண்டியார் அரசு தேயிலை தோட்ட கழகமான டான்டீ சரகம் 1 பி தேயிலை தோட்டம் அருகே நீரோடை பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்தது. தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர்கள் மற்றும் வன ஊழியர்கள் உடலை ஆய்வு செய்தனர். நீரோடையை கடக்க முயன்ற பெண் யானை வழுக்கி விழுந்து சேற்றில் சிக்கி இறந்தது தெரிய வந்தது. உடலை முதுமலை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர்.
ஆக 30, 2024