/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ தாயுடன் குட்டியை கண்காணிக்கும் வனத்துறை|Nilgiris |baby elephant that fell
தாயுடன் குட்டியை கண்காணிக்கும் வனத்துறை|Nilgiris |baby elephant that fell
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அப்பர் கார்குடி அருகே பிறந்து சில நாட்களான குட்டி யானை தாயுடன் உலா வந்தது. தண்ணீர் குடிக்க வந்த போது குட்டி யானை கால்வாயில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது. தாய் யானை பிளிரியப்படி குட்டியை மீட்க போராடியது. தகவல் அறிந்து வந்த வனச்சரகர் விஜய் மற்றும் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் தாய் யானையை அங்கிருந்து விரட்டினர். குட்டி யானை கால்வாயிலிருந்து மீட்டு தாய் யானையுடன் சேர்த்தனர். தொடர்ந்து தாயுடன் குட்டியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூன் 24, 2024