1978 ம் ஆண்டு முதல் குத்தகை தொகை நிலுவை | ₹ 822 crore outstanding | seal for the racecourse
1978 ம் ஆண்டு முதல் குத்தகை தொகை நிலுவை | ₹ 822 crore outstanding | seal for the racecourse | ooty நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 120 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தது. தற்போது வரை 822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவையில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த ஜூன் 21ம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். எனினும் நோட்டீஸ்க்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகம் பதில் அளிக்காமல் கிடப்பில் போட்டது. தொடர்ந்து இன்று காலை RDO மகாராஜ் தலைமையில் போலீஸ் உதவியுடன் வருவாய் அலுவலர்கள் நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தொடர்ந்து ரேஸ்கோர்சை சுற்றி ஆங்காங்கே இந்நிலம் அரசுக்கு கையகப்படுத்தப்பட்டது என பேனர் வைக்கப்பட்டது. குதிரை பந்தயம் மைதானத்திற்குள் உள்ள அலுவலகக் கட்டிடங்கள் நிர்வாக கட்டிடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.