உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தென்னகத்தின் நீர் தொட்டி என அழைக்கப்படும் ஓவேலி | Sudden Water Falls | Nilgiris

தென்னகத்தின் நீர் தொட்டி என அழைக்கப்படும் ஓவேலி | Sudden Water Falls | Nilgiris

நீலகிரி மாவட்டம் கூடலூர், நடுவட்டம், மசினகுடி பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இங்கு நிலவும் மிதமான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தென்னகத்தின் நீர் தொட்டி என அழைக்கப்படும் ஓவேலி வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் எங்கு திரும்பினாலும், பசுமை வனங்களும், வெண்மை நிறத்தில் விழும் அருவிகள் என கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அவ்வப்போது படர்ந்து செல்லும் மேகமூட்டம், பசுமையான தேயிலை தோட்டங்கள் உள்ளூர் மக்களை மற்றுமின்றி அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. உள்ளூர் மக்கள் கூறுகையில், மழையின் போது ஆறுகள் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் மண் கலந்த நிலையில் காணப்படும். இங்குள்ள நீர்வீழ்ச்சிகள், ஆறுகளில் மழையின் போது வெள்ளம் ஏற்பட்டாலும் ஆறுகளில் தண்ணீர் வெண்மையாக காட்சியளிப்பது இப்பகுதியின் சிறப்பாகும் என்றனர்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை