வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் வீடு முடிக்கப்பட்டு வீட்டு ரசீது வாங்கும் போது லஞ்சம் அல்லது அன்பளிப்பு அல்லது இனாம் வாங்குவது ஒரு பொதுவான நிகழ்வு. இதற்குப் பின்னால் நிறைய அரசியல்வாதிகள் ஈடுபாடு உள்ளது. தமிழக அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்கு மாத மாதம் ஊதியம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அரசாங்க ஊழியர்கள் மாதம் தங்களால் முடிந்த அளவிற்கு லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் இது ஊரறிந்த உண்மை. ஆனால் இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எல்லா அரசியல் ஊழியர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஒரு சில துறைகளில் லஞ்சம் மிகவும் தலைவருத்து ஆடுகிறது. ஏழை மக்கள் தங்களுடைய வேலையை முடிக்க வேற வழி இல்லாமல் லஞ்சம் கொடுத்து வேலையை முடிக்கிறார்கள். அவர்களும் அலைந்து நடந்து விழுந்து எழுந்து கடைசியில் வேறு வழியில்லாமல் லஞ்சம் கொடுத்து தங்களுக்கு தேவையான அரசாங்க உரிமைகளை கேட்டுப் பெறுகின்றனர்.