உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டண உயர்வு ரத்து செய்யக்கோரி அதிமுக முற்றுகை | EB bill raise | ADMK protest | Puducherry

மின் கட்டண உயர்வு ரத்து செய்யக்கோரி அதிமுக முற்றுகை | EB bill raise | ADMK protest | Puducherry

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு கடந்த 16 ம் தேதி முதல் அமலானது. இதன்படி யூனிட் ஒன்றுக்கு 45 காசு முதல் 70 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை உடனே வாபஸ் பெறக்கோரி அதிமுக சார்பில் சோனாம்பாளையம் மின் வாரிய தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அலுவலக மெயின் கேட்டை அதிமுகவினர் இழுத்து மூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அதிமுகவினர் கழுத்தில் ஒயரை கட்டி இறுக்கிக் கொண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முற்றுகை போராட்டத்தால் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டங்கள் வெடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டது.

ஜூன் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !