/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ எல்லாம் போச்சு... என்ன பண்ணுவோம்! மீனவ பெண்கள் கதறல் | fishermen arrested | Tamil fishermen issue
எல்லாம் போச்சு... என்ன பண்ணுவோம்! மீனவ பெண்கள் கதறல் | fishermen arrested | Tamil fishermen issue
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெயமதிக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 15 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்ததாக கூறி 15 பேரையும் கைது செய்தனர். படகையும் சிறை பிடித்தனர். பின்னர் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பிடிபட்ட மீனவர்கள், படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வலியுறுத்தினர். இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.
மார் 15, 2024