/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்| mariamman koil kumbabeshegam|mannarkudi
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்| mariamman koil kumbabeshegam|mannarkudi
மன்னார்குடி பஸ் நிலையம் அருகே மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிேஷக யாக பூஜைகள் கடந்த 28ஆம் தேதி துவங்கியது. யாக பூஜைகள் முடிவடைந்து இன்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில், ஸ்ரீ யோக சுந்தர விநாயக கோயில்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மார் 31, 2025