பாஜக பிரமுகர் உமா சங்கர் படுகொலை எதிரொலி | police raid| in rowdies house|Pondy
பாஜக பிரமுகர் உமா சங்கர் படுகொலை எதிரொலி / police raid/ in rowdies house/Pondy புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உமா சங்கர். பாஜக பிரமுகரான இவரை சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். அதைத் தொடர்ந்து ரவுடிகளின் அட்டகாசத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு போலீஸ் எஸ்பி எஸ்பி வம்சித ரெட்டி தலைமையில் ஆப்ரேஷன் திரிசூல் எனும் பெயரில் ரவுடிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கருவடிக்குப்பம் மற்றும் வில்லியனுார் பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடியாக புகுந்து ரெய்டு நடத்தினர். வீட்டிற்குள் ஆயுதங்கள் பதுக்கிப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர். இதில் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை. ரவுடிகள் மீதான ஆப்ரேஷன் திரிசூல் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.