உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திருப்பத்துார் மாணவர்கள் அபார ஆட்டம் | sports | viruthunagar

திருப்பத்துார் மாணவர்கள் அபார ஆட்டம் | sports | viruthunagar

விருதுநகர் மாவட்டம் திருத்தங்களில் மாநில அளவிலான ஜூனியர் பிரிவு வளைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 18 மாவட்டங்களை சேர்ந்த 250 மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 34 மாணவர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அதில் அரசு பள்ளியில் படிக்கும் தமிழ் என்ற மாணவர் ஒற்றையர் பிரிவில் முதல் இடம் பிடித்தார். மாணவிகளுக்கான ஒற்றையர் போட்டியில் மாணவி மணிமொழி முதலிடம் பெற்றார். மகாலெட்சுமி 4வது இடம் பிடித்தார். மூவரும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். ஊர் திரும்பிய அவர்களை கிராமத்தினர் மேள தாளம் முழங்க தடபுடல் வரவேற்பு அளித்தனர்.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ