தமிழ்ப் பல்கலை துணை வேந்தர் அறிவுரை | Puducherry | Thanjavur Tamil University Vice Chancellor
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அங்குள்ள சோரப்பட்டு என்ஞ கிராமத்தில் தமது உயர்நிலைக் கல்வி பயின்றார். பின்னர் கடலூர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளைப் படித்து தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். தான் படித்த அரசு பள்ளிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது தாத்தா பாட்டி பெயரில் ரூ.1 லட்சம் மதிப்பில் அறக்கட்டளையை நிறுவினார். இதற்கான விழா சோரப்பட்டு பள்ளியில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை கல்வி அதிகாரி மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். விழாவில் பேசிய துணைவேந்தர், அரசு பள்ளிகளில் படித்த ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகளில் அறக்கட்டளை நிறுவி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தினார். நாம் பெற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் போது இருக்கும் திருப்திக்காக தான் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தேன் என பெருமைப்பட கூறினார்.