மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி துவக்க விழாவில் ரங்கசாமி பெருமிதம்
மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி துவக்க விழாவில் ரங்கசாமி பெருமிதம்| Government Function| Vande Mataram| Puducherry புதுச்சேரி மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சி கிராமத்தில் அரசு விழா நடந்தது. PWD சார்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி துவக்க விழா நடைபெற்றது. துணை ஆளுநர் கைலாஷ்நாதன் முதல்வர ரங்கசாமி சபாநாயகர் செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. விழாமுடிவில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து தேசிய பாடலான வந்தே மாதரம் ஓங்கி ஒலித்தது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகளை எடுத்து கூறினார். பிரதமர் மோடி கூறியபடி புதுச்சேரி கொஞ்சம் கொஞ்சமாக பெஸ்ட் புதுச்சேரியாக மாறி கொண்டு வருகிறது என பேசினார்.