/ மாவட்ட செய்திகள்
/ புதுக்கோட்டை
/ தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு | Pudukottai | Foot Puja | Government Warning
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு | Pudukottai | Foot Puja | Government Warning
புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முன் பள்ளிகளில் தங்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் மாணவர்கள் கொடுமைப்படுத்துவதாக பலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பினார். அதில் இனி வரும் காலங்களில் பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வுகளும் பள்ளிகளில் மேற்கொள்ள கூடாது. அது போன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
டிச 24, 2024