/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ கடலில் மூழ்கிய நான்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கதி என்னாச்சு? Ramanathapuram 4 fishermen missing
கடலில் மூழ்கிய நான்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கதி என்னாச்சு? Ramanathapuram 4 fishermen missing
ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் விசைப்படகில் கடந்த புதன்கிழமை இரவு கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ரோந்து வந்த இலங்கை கடற்படையினரை கண்டதும் ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகை கரையை நோக்கி திருப்பினர். இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் மீனவர்களை துரத்தினர். கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகை பலமாக மோத விட்டனர்.
ஆக 01, 2024