உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகத்தில் முதல் முயற்சி | 1,000 volunteers to protect children

தமிழகத்தில் முதல் முயற்சி | 1,000 volunteers to protect children

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் ஆறு லட்சம் பேர் உள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பிற்காக குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக்குழு போன்ற அமைப்புகளில் குறைந்த அளவு பணியாளர்களே உள்ளனர். இதனால் குழந்தைகள், பெண்கள் உரிமைகளை பாதுகாக்க, 1,000 தன்னார்வலர்களை உருவாக்க கலெக்டர் விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தினார். அதன்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது: முதற்கட்டமாக ஏழு கல்லுாரிகளில் பயிலும் மாணவியர் 210 பேருக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொண்டு நிறுவனங்களின் மூலம் 240 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஜூலை மாதத்தில் கலைக் கல்லுாரிகளில் பயிலும் மாணவியரை தேர்வு செய்து கிராமம்தோறும் அவர்கள் இருக்கும் வகையில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் முன் களப்பணியாளர்களாக செயல்பட்டு ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்களை குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தருவர். அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ராமநாதபுரத்தில் முதன் முறையாக அமல்படுத்தப்படுகிறது என்றார்.

மே 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ