/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ அரக்கோணம் மொபட் திருடனுக்கு மக்கள் தர்ம அடி | Arakkonam | Crime News | two wheeler theft
அரக்கோணம் மொபட் திருடனுக்கு மக்கள் தர்ம அடி | Arakkonam | Crime News | two wheeler theft
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வசிக்கும் சுதா என்பவர் தனது மொபட்டை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். பட்டப்பகலில் ஆசாமி ஒருவன் லாக்கை உடைத்து மொபட்டை திருடினான். இதை பார்த்த சுதா கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆசாமியை மடக்கி பிடித்தனர். கைகளை கட்டி தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அரக்கோணம் ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பதும், இதுவரை 6 மொபட் திருடியதும் தெரிந்தது. அவர் திருடியது அனைத்தும் டிவிஎஸ் மொபட் ரகம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமதாசை போலீசார் கைது செய்தனர்.
பிப் 16, 2024