உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அவருடைய விடாமுயற்சி வெற்றியை தந்தது, தந்தை பெருமிதம் | Salem | Karthikeyan is an IPS

அவருடைய விடாமுயற்சி வெற்றியை தந்தது, தந்தை பெருமிதம் | Salem | Karthikeyan is an IPS

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை சேர்ந்த லாரி டிரைவர் அறிவழகன். லாரி டிரைவராக இருந்த அவர் வயதானதால் முத்துமலை முருகன் கோயிலில் தற்போது கேசியராக உள்ளார். இவருக்கு கார்த்திகேயன், விக்னேஸ்வரன் என 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் கார்த்திகேயன் சிறு வயது முதல் ஐபிஎஸ் ஆக வேண்டும் கனவுடன் படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பட்டப்படிப்பை முடித்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். தேர்ச்சி பெற்று ரயில்வேயில் பணி கிடைத்தது. பணியாற்றிக்கொண்டே தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதி கடந்த ஏப்ரலில் ஐபிஎஸ் ஆக தேர்வானார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி