ஐந்து கிராமங்களில் போக்குவரத்து 'கட்' | The bridge was washed away by the floods | Yarcadu
சேலம் மாவட்டம் ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகளில் பாறை விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பட்டுள்ளது. ஏற்காட்டில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புத்தூர் டு புளியங்காடு செல்லும் வழியில் இருந்த 20 அடி பாலம் காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது இதனால் 5 கிராமங்களுக்கு செல்லும் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஐந்து கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமல் மீட்பு பணியை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும் என ஐந்து கிராம மக்கள் வலியுறுத்தினர்.