மாவட்ட இடைநிலை கல்விஅலுவலர்விசாரணை |School teacher suspension | education officer inspection | Attur
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கிழக்குராஜபாளையம் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கணித ஆசிரியர் ஜெய பிரகாசுக்கு மாணவர்கள் கால் பிடித்து விடும் வீடியோ வெளியானது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் விசாரணை நடத்தி ஆசிரியர் ஜெயப்பிரகாஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கணித ஆசிரியருக்கு ஆதரவாக சஸ்பெண்ட் உத்தரவை நீக்க வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் நரசிம்மன் விசாரணை நடத்தினார். அங்கு வந்த பொதுமக்கள், ஆசிரியர் ஜெயபிரகாஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டவர். அடிக்கடி அவருக்கு மயக்கம் வரும். அப்போது தான் மாணவர்கள் அவருக்கு கால் பிடித்து விட்டனர். இதை வீடியோ எடுத்து ஆசிரியர் ஒருவர் வெளியிட்டார். அந்த ஆசிரியர் சக ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பொதுமக்கள் பெயரில் அதிகாரிகளுக்கு புகார் அளித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட இடைநிலை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.