/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ ஆத்துார் உழவர் சந்தையில் பொங்கல் சேல்ஸ் சூப்பர் | Ulavarchanthai sales is super | Attur | Salem
ஆத்துார் உழவர் சந்தையில் பொங்கல் சேல்ஸ் சூப்பர் | Ulavarchanthai sales is super | Attur | Salem
சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தைக்கு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மாட்டுப் பொங்கலையொட்டி 202 விவசாயிகள் 76 வகையான 52 ஆயிரத்து 193 கிலோ காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். காய்களை 10,439 வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். காய்கறி, கீரை வகைகள், பழங்கள், வாழை இலைகள், பூக்கள் என அனைத்தும் அதிக அளவில் விற்பனையானது. மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று ஒரே நாளில் 52,193 கிலோ காய்கறிகள் 21 லட்சத்து 66 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்று தீர்ந்தது.
ஜன 15, 2025