உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / விழாக்கோலம் பூண்டது இடைக்காட்டூர்|Chariot Bhavani|Thiru Irudaya Aalayam | Idaikatur

விழாக்கோலம் பூண்டது இடைக்காட்டூர்|Chariot Bhavani|Thiru Irudaya Aalayam | Idaikatur

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறும். ஆலயத்தின் 130வது ஆண்டு திருவிழா கடந்த ஜூன் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் 9 ம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளி இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் திருஇருதய ஆண்டவர் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 1

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ