அமைச்சர் செய்தது என்ன... சேர்மன் கேள்வி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய ஊராட்சி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று விழாவை புறக்கணித்த சேர்மனை கண்டித்து பேசினார். அமைச்சர் சென்ற பிறகு கூட்டத்திற்கு வந்த சேர்மன் திவ்ய பிரபு, மக்கள் தனக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ளனர். என்னை ராஜினாமா செய்து விட்டு போகச் சொல்ல அமைச்சர் யார் என பதிலடி கொடுத்தார். மக்களுக்கு அமைச்சர் என்ன செய்துள்ளார் என விவாதிக்க நான் தயார் அமைச்சர் தயாரா என சவால் விடுத்தார்.
ஜூலை 29, 2024