ஆஞ்சநேய உத்ஸவம் | Sri Radhakrishnan | Thirukkalyanam
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்குமட வளாகத்தில் 21-ஆம் ஆண்டு ஸ்ரீராதாகிருஷ்ண திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்,நாதசங்கமம், திவ்ய நாம பஜனை மற்றும் போலோத்ஸவம், பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சியை தொடர்ந்து ஸ்ரீ ராதாகிருஷ்ணனின் 21-ஆம் ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஆஞ்சநேய உத்ஸவமும் நடைபெற்றது. மெலட்டூர் பாகவத மேளா குழுவினரின் பிரகலாத சரித்திரம் நடைபெற்றது.
ஜன 01, 2024