/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ தஞ்சை-விக்ரவாண்டி ரோட்டில் மறியல்! ஸ்தம்பித்தது போக்குவரத்து | Public Protest | Thanjavur
தஞ்சை-விக்ரவாண்டி ரோட்டில் மறியல்! ஸ்தம்பித்தது போக்குவரத்து | Public Protest | Thanjavur
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கருப்பூர் கிராம மக்கள் சர்வீஸ் ரோடு கேட்டு பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை-விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சர்வீஸ் ரோடு அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. போராட்டத்தால் அந்த ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜன 04, 2024