ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு | Handuri festival
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வடக்கு மாங்குடி பள்ளிவாசலில் கந்தூரி விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சந்தனம் பூசும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. பள்ளிவாசலில் இருந்து எடுத்து செல்லப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக சென்று பாத்தியா ஓதப்பட்டு மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது. ஊர்வலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆக 21, 2024