/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் | Mariamman Temple | Thimiti Festival
பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் | Mariamman Temple | Thimiti Festival
தஞ்சாவூர் மாவட்டம், தேப்பெருமாநல்லூரில் மகா மாரியம்மன், சுந்தர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா இன்று நடந்தது. கோவிலுக்கு எதிரே அம்மன் எழுந்தருள பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்
ஏப் 02, 2024