சோத்துப்பாறை அணையில் உபரி நீர் வெளியேற்றம் |Theni|Flood in Varaha river
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீிர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடந்து செல்லவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜன 07, 2024