/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ சிசிடிவி கேமராவை திருப்பும் போது சிக்கிய "புத்திசாலி" கொள்ளையர்கள் | Theft in Temple| Theni
சிசிடிவி கேமராவை திருப்பும் போது சிக்கிய "புத்திசாலி" கொள்ளையர்கள் | Theft in Temple| Theni
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் அய்யனார் கோயில் உள்ளது. வெள்ளி இரவு மர்ம ஆசாமிகள் 3 பேர் கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். சிசிடிவி கேமராவை திருப்பி வைத்து விட்டு, பணத்தோடு உண்டியலை தூக்கி சென்றனர். கோயிலுக்கு சென்ற மக்கள் உண்டியல் திருடு போனதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். 3 பேர் அடையாளமும் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிப் 17, 2024