/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ கலெக்டர் கள ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல் |Nellai |Collector |school field survey
கலெக்டர் கள ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல் |Nellai |Collector |school field survey
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பரில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் இறந்தனர். இதையடுத்து கலெக்டர் தலைமையில் பள்ளி கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய 18 குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழு 1,535 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்தது. ஆனால் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. பள்ளி கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாரிசங்கர் கலெக்டரிடம் விண்ணப்பித்தார்.
ஜூலை 04, 2024