உலக நன்மை வேண்டி யாகம் | Nava chandi yagam | Thiruvarur
திருவாரூர் சித்தாடி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயிலில் நவசண்டியாகம் விமர்சையாக நடைபெற்றது ஜனவரி 22ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது 24 ஆம் தேதி பால்குடம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது முக்கிய நிகழ்வான உலக நன்மை வேண்டி நவச்சண்டியாகம் இன்று நடைபெற்றது மங்கள வாத்தியங்கள் முழங்க 108 யாக பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர் புனித நீர் நிரம்பிய கலசங்களை சிவாச்சாரியார் காத்தாயி அம்மன், தண்டாயுதபாணி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தனர் மகா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
ஜன 26, 2025