/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் |headmaster kisses lady staff Relatives storm school
பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் |headmaster kisses lady staff Relatives storm school
இப்பள்ளியில் ஆனந்தி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன் ஆனந்தியின் கணவர் இறந்து விட்டார். இதையறிந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணி வயது 57 ஆனந்திக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். நேற்று ஆபீசில் யாருமில்லாத நேரத்தில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, ஆனந்திக்கு முத்தம் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த ஆனந்தி, பெண் உதவி தலைமை ஆசிரியையிடம் புகார் கூறியுள்ளார். தகவல் அறிந்த ஆனந்தியின் உறவினர்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
அக் 15, 2024