TNPL கிரிக்கெட் போட்டியிடம் இடம் பெற்றுள்ள வீரர்கள் | I DREAM THIRUPPUR TAMIZHANS
கோவை சித்ரா பகுதியில் TNPL கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் திருப்பூர் அணியான ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ( I DREAM THIRUPPUR TAMIZHANS) அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். TNPL கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறுகையில், எங்கள் அணி இரண்டு முறை தோல்வியை சந்தித்தது. எனினும் அணியின் அட்மாஸ்பியர் நன்றாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் பிரஷர் காரணமாக தவறுகள் நடந்தது. அதனை இனிவரும் ஆட்டங்களில் சரி செய்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக தான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு ருகிறோம் என்றார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்றது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த விஜய் சங்கர், அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமான ஒன்றுதான். மக்களைப் போன்று நாங்களும் அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பதற்கு ஆர்வமாக காத்திருக்கிறோம் என்றார்.