/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  திருப்பூர் 
                            / சர்வதேச போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள தேர்வு | international letter writting competition |                                        
                                     சர்வதேச போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள தேர்வு | international letter writting competition |
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் சார்பில் உலக அளவில் மாணவ, மாணவியருக்கான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆண்டு “எதிர்கால சந்ததியினர் எவ்வகையான உலக வாழ்வைப் பெற்றிருப்பர்” என்ற மையக்கருத்தில் போட்டி நடைபெற்றது. கரூர் பரணி வித்யாலயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஆதிரா மணிகண்டன், தமிழக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார். ஜெர்மன் தலைநகரம் பெர்லினில் நடைபெறும் உலக அளவிலான இறுதிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கு பெற ஆதிரா மணிகண்டன் எழுதிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 அக் 19, 2024