உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திறமையை வெளிக்காட்டிய வீராங்கனைகள் | Tiruppur | Kabaddi competition

திறமையை வெளிக்காட்டிய வீராங்கனைகள் | Tiruppur | Kabaddi competition

திறமையை வெளிக்காட்டிய வீராங்கனைகள் / Tiruppur / Kabaddi competition திருப்பூர், தெற்கு குறுமைய சார்பில் மாணவிகளுக்கான கபடி போட்டி முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தார். 14 வயதிற்குட்பட்ட பிரிவில், எஸ். பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், இரண்டாமிடம் மணி பப்ளிக் பள்ளி பெற்றனர். 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், எஸ். பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், பிளாட்டோஸ் அகடாமி பள்ளி இரண்டாம் இடம் பிடித்தனர். 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விவேகானந்தா பள்ளி முதலிடமும், இரண்டாமிடம் முருகப்பா செட்டியார் பள்ளியும், பிடித்தனர். போட்டியின் நடுவர்களாக ஆனந்தன், முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜூலை 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி