/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ வருவாய், கனிம வள அதிகாரிகள் அமோக ஆதரவுடன் கனிம வளம் கொள்ளை | Mineral resource theft | palladam
வருவாய், கனிம வள அதிகாரிகள் அமோக ஆதரவுடன் கனிம வளம் கொள்ளை | Mineral resource theft | palladam
வருவாய், கனிம வள அதிகாரிகள் அமோக ஆதரவுடன் கனிம வளம் கொள்ளை / Mineral resource theft / palladam திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் - ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீரோடை செல்கிறது. ஓடையின் ஒரு பகுதியில் 500 க்கும் மேற்பட்ட லோடு மண் கடத்தப்பட்டது. இதனால் ஓடையில் மெகா பள்ளம் உருவானது. இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ஓடையில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து மண் கடத்தப்பட்டது தொடர்பாக வி.ஏ.ஓ.,விடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மண் கடத்தல் மாபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஏப் 29, 2025