வீரர்கள் அபார ஆட்டம் | sports | covai
திருப்பூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் மாவட்ட வாலிபால் அணித்தேர்வு நடைபெற்றது. போட்டியை மாநில வாலிபால் கழக துணை சேர்மன் ரங்கசாமி துவக்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 46 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் சிறப்பாக திறமை காட்டிய 12 பேர் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வரும் நவம்பர் 2 முதல் 5ம் தேதி வரை மூன்று நாட்கள் வேலுாரில் நடக்கும் மாநில ஆண்கள் வாலிபால் போட்டியில் திருப்பூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்பர். முன்னதாக அக்டோபர் 28 முதல் நவம்பர் 1ம் தேதி வரை காங்கயம் இ.பி.இ.டி. கல்லுாரியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.
அக் 27, 2024