/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ 1984 ம் ஆண்டு கட்டப்பட்ட மண் வீடுகளில் தினமும் மரண போராட்டம் | Houses are falling apart | Udumalpet
1984 ம் ஆண்டு கட்டப்பட்ட மண் வீடுகளில் தினமும் மரண போராட்டம் | Houses are falling apart | Udumalpet
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. அரசு சார்பில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் அரசுத் துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில் பல ஆண்டுகளாக தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் 110 வீடுகளில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகள் கடந்த 1984ம் ஆண்டு மண் சுவர் மற்றும் தகர மேற்கூரையால் கட்டித்தரப்பட்டது.
டிச 20, 2024