சவுத் இந்தியன் ஓப்பன் கராத்தே கட்டா சாம்பியன்ஷிப் போட்டி |Sports
திருப்பூர் மாவட்டம் உடுமலை எரிப்பாளையம் PSM மஹாலில் 4வது சவுத் இந்தியன் ஓப்பன் கட்டா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. போட்டியை தொழிலதிபர்கள் பன்னீர்செல்வம் மற்றும் விஜயகுமார் துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நடுவர்களாக ரகுபதி, வராதராஜன், பிரசாந்த், செந்தில் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஜன 01, 2024