/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ அய்யம்பாளையம் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி| Tribute at Farmers Memorial
அய்யம்பாளையம் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி| Tribute at Farmers Memorial
கடந்த 1972 ம் ஆண்டு மின் கட்டண உயர்வுக்காக போராடி உயிர் நீத்த முன்னோடி விவசாயிகள் சுப்பையன் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோரின் நினைவாக பல்லடம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஜூலை 5ம் தேதி விவசாயிகள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சுப்பையன் மற்றும் முத்துக்குமாரசாமி வம்சாவளியினர், உறவினர்கள் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து படையல் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஜூலை 06, 2024