உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவண்ணாமலை / அழகிப்போட்டியை துவக்கி வைத்த நடிகை நமீதா

அழகிப்போட்டியை துவக்கி வைத்த நடிகை நமீதா

அழகிப்போட்டியை துவக்கி வைத்த நடிகை நமீதா / koothandavar Temple / beauty competition /pondy Aiswarya Roy won first place திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதத்தையொட்டி திருநங்கைகள் திருவிழா நடந்தது. அதன் ஒரு பகுதியாக அழகிப் போட்டி, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை நடிகை நமீதா துவக்கி வைத்தார். இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர். அழகிப்போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் முதலிடம் வென்றார். சென்னையைச் சேர்ந்த ரசிகா மற்றும் வெண்பா ஆகியோர் முறையே 2 மற்றும் 3ம் இடம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கிரீடம் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். விழாவில் ஏராளமானோர் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி