/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தேசிய துப்பாக்கி சுடும் தகுதி போட்டியில் 300 பேர் பங்கேற்பு | Trichy | National for NCC Students
தேசிய துப்பாக்கி சுடும் தகுதி போட்டியில் 300 பேர் பங்கேற்பு | Trichy | National for NCC Students
NCC மாணவர்களுக்கான தேசிய துப்பாக்கி சுடும் தகுதி போட்டி திருச்சி கேடட் அகாடமியில் துவங்கியது. இதில் 17 NCC இயக்குனரகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 50 மீட்டர் காலிபர் துப்பாக்கி, 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஏர் பிஸ்டல் பிரிவில் 12 பிரிவுகளில் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனி போட்டிகள் நடைபெற்றன. ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடும் தகுதி போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்கள் செப்டம்பர் மாதம் ஜிவி மவலங்கா தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
ஜூலை 04, 2024