இருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது | Trichy | Student sexually harassed
இருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது / Trichy / Student sexually harassed திருச்சி மாவட்டம் சமயபுரம் புறத்தாக்குடியில் சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்திலேயே சேவியர் பிரிட்டோ விடுதி உள்ளது. இங்கு 110 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் கும்பகோணம் அய்யாவாடியை சேர்ந்த பாதிரியார் குழந்தைநாதன் வார்டனாக உள்ளார். குழந்தை நாதனின் நண்பர் சுந்தர்ராஜன். இவர் திருச்சியில் தங்கி பாதிரியாருக்கான மேற்படிப்பு படிக்கிறார். விடுமுறை நாட்களில் விடுதிக்கு வரும் சுந்தர்ராஜன் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. மாணவர்கள் குழந்தைநாதனிடம் புகார் கூறியும் பயனில்லை என்பதால் மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். சுந்தர்ராஜன் மீது பெற்றோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தியிடம் புகார் கூறினர். தொடர்ந்து ராகுல் காந்தி மாணவர்களிடம் விசாரித்தார். இதில் மாணவர்களுக்கு சுந்தர்ராஜன் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் ராகுல் காந்தி புகார் கூறினார். விடுதி வார்டன் குழந்தைநாதன், அவரது நண்பர் சுந்தர்ராஜன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.