திரளான பெண் பக்தர்கள் பங்கேற்பு | thirupirampenathar Kovil festival
திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான சோழர்கள் காலத்து திருப்பிரம்பீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை விழாவையொட்டி உலக நன்மை வேண்டி கோயிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. 201 பெண் பக்தர்கள் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
செப் 09, 2024