உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயில் தொல்லியல் துறை நிர்வாகம் மீது புகார்

ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயில் தொல்லியல் துறை நிர்வாகம் மீது புகார்

ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயில் தொல்லியல் துறை நிர்வாகம் மீது புகார் |Archaeological Activities Traders complain to collector வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 23 ம் தேதி சித்ரா பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். தொல்லியல்துறை அனுமதியின்றி கோயிலுக்குள் பக்தர்கள் திரண்டதாக கூறி கோட்டையின் மெயின் கேட்டை ஊழியர்கள் பூட்டி சாவியை எடுத்து சென்றனர். கோயிலுக்குள் தரிசனம் செய்ய சென்ற 750க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் முடிந்து வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். அங்கு வந்த இந்து முன்னணியினர் கேட்டை திறக்க முயன்றதால் ஊழியர்களுக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வர அனுமதிக்கப்பட்டனர். தொல்லியல்துறை நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டர் சுப்புலட்சுமியை சந்தித்த மனு அளித்தனர். அதில் கோயில் வழிபாட்டில் தொல்லியல் துறை தலையிடக் கூடாது என்ற கோர்ட் உத்தவை தொல்லியல் துறையினர் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

ஏப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ