உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / காட்பாடி அருகே 2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் சாம்பல் | fire accident | sugar cane | katpadi

காட்பாடி அருகே 2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் சாம்பல் | fire accident | sugar cane | katpadi

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கருகிரியை சேர்ந்த விவசாயி ராமன். இவர் தனது 6 ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இவரது கரும்பு தோப்பில் திடீரென தீப்பற்றியது. இதை பார்த்த பக்கத்து தோட்ட விவசாயி ராமனுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் வேகமாக வந்து தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் 2 ஏக்கர் கரும்பு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதை பார்த்து ராமன் கண் கலங்கினார். கரும்பு தோட்டத்துக்கு யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது மின் ஒயர் உரசி தீப்பற்றியதா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

ஜன 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ