வேடங்கள் அணிந்து பக்தர்கள்நேர்த்திக்கடன்|Vallimalai temple function
காட்பாடி அருகே வள்ளிமலை கிராமத்தில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் மயான புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு சிறப்பு வேடங்கள் அணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மயானத்தில் பூஜை சூறை, விடுதல் ஆகியவை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மார் 17, 2024