/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ திரளான பக்தர்கள் பங்கேற்பு | vaikundavasa Perumal Kovil kumbabhishekam |Villupuram
திரளான பக்தர்கள் பங்கேற்பு | vaikundavasa Perumal Kovil kumbabhishekam |Villupuram
விழுப்புரத்தில் பழமை வாய்ந்த ஜனகவல்லி தாயார் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி கடந்த 13 ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்கின. மூன்று கால யாக பூஜைக்கு பின் இன்று காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜையில் இருந்த புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு இனிப்புடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
செப் 15, 2024