உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / சுடுமண்ணால் செய்யப்பட்டமனிதன்கால் பகுதி கண்டுபிடிப்பு |Virudhunagar |Excavation ofVijayakarisalkulam

சுடுமண்ணால் செய்யப்பட்டமனிதன்கால் பகுதி கண்டுபிடிப்பு |Virudhunagar |Excavation ofVijayakarisalkulam

சுடுமண்ணால் செய்யப்பட்ட மனிதன் கால் பகுதி கண்டுபிடிப்பு | Virudhunagar | Excavation of Vijayakarisalkulam விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்தாண்டு ஜூன் 18ம் தேதி துவங்கியது. இதில் தங்க நாணயம், செப்பு காசுகள், சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3280 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அகழாய்வு குழியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் பகுதி மற்றும் சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய வகை மண் குடுவை, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் கிடைத்தன. தொன்மையான தமிழரின் நாகரீகப் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக சுடுமண்ணை பயன்படுத்தி பல்வேறு கலைநயமிக்க பொருட்களை தயாரித்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறினர்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ