நெதன்யாகு உண்மையை சொன்னதும் ஹெஸ்புலா தாண்டவம் Israel vs Hezbollah | Pager attack | Netanyahu | Iran
ஈரான் ஆதரவு பெற்ற ஹமாசை தொடர்ந்து ஹெஸ்புலா பயங்கரவாதிகளை எதிர்த்தும் இஸ்ரேல் தீவிர போரை துவங்கியது. ஹெஸ்புலாவுக்கு எதிரான போர் செப்டம்பர் மாதம் வெடித்தது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் நடத்திய பேஜர் மற்றும் வாக்கிடாக்கி அட்டாக். ஹெஸ்புலா பயங்கரவாதிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. 40 ஹெஸ்புலா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ஆயிரம் பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த நூதன தாக்குதல் உலகம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது. இஸ்ரேலின் உளவு பிரிவான மொசாட் தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று பல ஆய்வுகள் கூறின. ஆனால் இதை இஸ்ரேல் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது இல்லை. இந்த நிலையில், நான் தான் பேஜர் அட்டாக் நடத்த ஒப்புதல் கொடுத்தேன் என்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி உள்ளார். இஸ்ரேல் தான் பேஜர் அட்டாக் நடத்தியது என்று ஏற்கனவே ஹெஸ்புலா உட்பட எல்லோருக்கும் தெரியும். என்றாலும், அதை இஸ்ரேல் பிரதமர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. ஹெஸ்புலா பயங்கரவாதிகள் ஆத்திரம் அடைந்தனர். பதிலடி கொடுக்க நேற்று இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தினர். ஒரே நாளில் 165 ராக்கெட் குண்டுகளை இஸ்ரேல் மீது ஹெஸ்புலா வீசியது.