நீங்க போலீசுன்னா நான் யாரு! திமிறிய போதை ஆசாமி | TASMAC | Police
நாமக்கல் பரமத்திவேலூர் ஸ்கூல் ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வீரமணி என்பவர் புல் போதையில் பைக்கில் வந்துள்ளார். அவரை நிறுத்திய போலீசார் போதையில் பைக் ஓட்டியதுக்கு அபராதம் போட்டுள்ளனர். ஆத்திரமடைந்த வீரமணி போலீசை நோக்கி எகிறிக்கொண்டு வந்தார். நீண்ட நேரம் போலீசார் பக்குவமாக எடுத்து சொல்லியும் வீரமணி அடங்கவில்லை. ஓரளவுக்கு தான் பொறுத்திருப்போம்; இன்னும் 10 நிமிஷத்தில் கிளம்பவில்லை என்றால் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வோம் என போலீசார் எச்சரித்தனர். கடைசி வரை வீரமணி யார் சொல்லியும் அடங்கவில்லை.
ஜூலை 19, 2024